வடக்கிலிருந்து இடம் பெயர்ந்துள்ள முஸ்லிம்களை அவர்களது தாயகத்தில் மீள்குடியேற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுக்கும் செயற்பாடுகளில் சில அதிகாரிகள் தொடர்ந்தும் ஈடுபடுவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்,இந்த சவால்களை முறியடிக்க அமைச்சுப் பதவி தடையாக இருக்குமெனில் அதனை தியகாம் செய்துவிட்டு மக்களோடு நின்று போராடி அதனை பெறுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
புத்தளம் வேப்பமடு அர்ரஹ்மா முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இன்று(2011.09.25) இடம் பெற்ற ஆசிரியர் இஸ்ஸதீன் றிழ்வான் எழுதிய என் மகன் ஒரு லீடர் என்னும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.எஸ்.முஹம்மத் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் பேச்சுகையில் கூறியதாவது-
வடக்கிலிருந்து பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 21 வருடங்களாகின்றன.கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலை தான், எமது மண்ணுக்கு மீண்டும் நாம் சென்று வாழ முடியாத சூழல்,ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது.இருந்த போதும் அன்று முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் எவ்வாறு வெளியேற்றப்பட்டார்களோ,அதனை விட மிகவும் பயங்கரமான முறையில் சில அதிகாரிகள் முஸ்லிம்களை இன்று வஞ்சிக்கின்றனர்.அம்மக்கள் தமது மண்ணுக்கு மீள்குடியுற்றத்துக்கு வருவதை அவர்கள் விரும்பாத மனநிலையினை கொண்டுள்ளனர்.அது குறித்து ஜனாதிபதிக்கும்,அமைச்சரவைக்கும்,பாராளுமன்றத்திலும் தெரிவித்துள்ளேன்.எந்த சமூகத்துக்கும் அநியாயம் செய்யாத வடமாகாண முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சில சக்திகள் செயற்படுவது அங்கீகரிக்கப்பட முடியாது.வடமாகாண முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் அதற்காக உதவி செய்யுங்கள் என்று நாம் சர்வதேசத்திடம் கேட்டால்,அப்படி இடம் பெயர்ந்த மக்கள் இருக்கின்றார்களா என்று தான் கேட்கின்றனர்,அண்மையில் இந்தியா ஜனாதிபதியினை சந்தித்து எமது மக்களது பிரச்சினைகளை கூறிய போது அவர்களும் இப்பிரச்சினை குறித்து தெரியாதவராகத் தான் இருந்திருக்கின்றார்.அந்த அளவுக்கு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள்
- 2 -
மழுங்கடிக்கப்பட்டு,மறைக்கப்பட்டுள்ளன.எமது மக்களது பிரச்சினைகளை அன்றைய தலைவர்கள் உரிய முறையில் சர்வதேச சமூகத்துக்கும்,முஸ்லிம் நாடுகளுக்கும் எடுத்துரைக்க தவறிவிட்டதாகவே தெரிகின்றது.
இது இச்சமூகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.கற்றல்,மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட சகல துறைகளிலும் ஒரு பாரிய பின்னடைவை கொண்டுள்ளது.இதனை கட்டியெழுப்புவதற்கு பல வருடங்கள் தேவையாகவுள்ளது.எமக்கு மக்கள் தந்துள்ள பதவிகளைக் கொண்டு அம்மக்களது உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றால்.அதனை துக்கி வீசிவிட்டு இடம் பெயர்க்கப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்களையும் ஒன்று திரட்டி போராடி அதனை பெறுவதற்கு தயாராகவுள்ளேன்.
தேர்தல் காலங்களில் வந்து வாக்குகளை கேட்டு அதனை பெற்றுக் கொண்டதன் பின்னர் ,அம்மக்களை துக்கியெறியும் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகின்றனர்.அப்படிப்பட்ட ஒரு அரசியல் அணி எமது நாட்டில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. .கட்சிக்குள் எத்தனை உயர் பதவிகளை வழங்கினாலும் அதன் மூலம் எவ்வித நன்மையும் மக்களுக்கு ஏற்படப் போவதில்லை.இப்படிப்பட்டவர்களை மக்கள் அவர்களை இனம் காண வேண்டும்.எமது மக்களுக்கு தேவயான பணிகளைஅபிவிருத்திகளை செய்கின்ற போது அதற்கு எதிரான செயற்பாடுகைளை இன ரிதியாக கொண்டுவரும் சூழ் நிலையினையே கானுகின்றோம். வட மாகாண முஸ்லிம்களது பிரச்சிணைகள் மற்றும் தேவைகள் குறித்து வெளிக் கொண்டுவருவதற்கு தனியான ஊடகங்கள் இல்லை.ஏனைய சமூகம் சார்ந்த பிரச்சினைகளை வெளிக் கொண்டுவருவதில் அவர்கள் சார்ந்த ஊடகங்கள் செயற்பாடுகின்றன,அது அவர்களது சுதந்திரம்,அதே போன்று எமது மக்களது அபிலாஷைகளையும்,எதிர்பார்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என் கௌரவமாக கேட்கின்றேன்.வடக்கு மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் போராட்டத்திற்கு ஊடகங்கள் தமது பங்களிப்பை தர வேண்டும்,அதற்கு முன்னுரியைளித்து காத்திரமான ஒத்துழைப்பை வழங்குங்கள்.
.வடமாகாண முஸ்லிம்களும் யுத்தத்தால் வெளியேற்றப்பட்டவர்கள் அவர்களுக்கும் வீட்டுத் திட்டங்களை கட்டித் தாருங்கள் என்று சில அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கேட்டால்,அதற்கு வேறு காரணங்களை காட்டி அதனை தட்டிக் கழிக்கின்ற நிலையே தற்போது காணப்படுகின்றது.என்னிடம் இன வாதமில்லை,எனது அமைச்சுப் பதவிகளை தமிழ்,முஸ்லிம் மக்களது மேம்பாடுகளுக்கே பயன்படுத்திவந்துள்ளேன்.ஏனெனில் எனது மாவட்டத்தில் வாழும் மக்களை நான் எனது மக்களாகவே பார்க்கின்றேன் என்பதினால்,இருந்த போதும் சில அதிகாரிகள் மனிநேயமற்ற முறையில் நடந்து கொள்கின்றனர்,இப்படிப்பட்ட வர்களின் சதிகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.தனி அமைச்சராலோ,அல்லது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களர்லோ,பிரதேச சபை பிரதி
-3 -
நிதிகளை வைத்துக் கொண்டு செய்வது சிரமமாகும்,அதற்கு மேலால் முழு வடக்கு முஸ்லிம்களும் ஒன்றுபட்டு, ,ஒரே கொள்கை கொண்ட,ஒரே இலக்கை நோக்கிய பயணத்திற்காக தயாராக இருக்காத வரை எமது ஒட்டு மொத்த பிரச்சினைகள்,மீள்குடியேற்றம் என்பனவற்றை அடைந்து கொள்வது மிகவும் கடினமானதாகும், இந்த போராட்டத்தை வெற்றிக் கொள்ள வடமாகாண முஸ்லிம் சமூகம் அணிதிரள வேண்டும்.இது எமது நியாயமான கோறிக்கையாகும் நாம் எந்த சமூகத்துக்கும் அநியாயம் செய்தவர்கள் அல்ல,வடக்கில் வாழும் எந்த சமூகத்தின் உரிமைகளையும் தட்டிப்பரித்த சமூகமல்ல,எமது உடமைகளையும்,சொத்துக்களையும் வழங்கிய சமூகம் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.
இந்த நிலையினை புரிந்து கொண்டு வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயக மண்ணில் மீள்குடியேறுவதற்கு தடையாக இருப்பவர்கள்,அதனை விடுத்து பாதிக்கப்பட்ட இந்த சமூகத்தின் கௌரவமான மீள்குடியேற்றத்துக்கு ஒத்தழைப்பு வழங்குங்கள்.என அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.இந்த நுலானது காலத்தின் தேவையுணர்ந்த்து வெளியிடப்படுகின்றது.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு அகதி முகாமில் வாழ்ந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் முசலியினை பிறப்பிடமாகக் கொண்ட இஸ்ஸதீன் றிழ்வானினால் எழுதப்பட்டுள்ளது.அவ்வாறு இன்னும் இன்னும் நுல்கள் எழுதப்பட்டு வெளியிடப்பட வேண்டும் அதன் மூலம் தான் எமது தாயகத்தின் பெறுமையும்,சிறப்பும் மேலோங்கும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அங்கு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ,முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய யஹியான்,மற்று உறுப்பினர்காளான எம்.சுபியான்,காம்மில்,மற்றும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் ரியாஸ் சலபி,வடமாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட செயலாளர் எம்.எம்.சியான் ,வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் டீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நுலாசிரியரிடமிருந்து முதற் பிரதியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் பெற்றுக் கொண்டார்.மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment