Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, August 23, 2017

புத்தளம் விழுது நிறுவனத்தின் மக்கள் தகவல் அறியும் சேவை



புத்தளம் விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்பிட்டி இளைஞர், பெண்கள் மற்றும் பொது மக்களுக்கான தகவல் அறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று கடந்த 12.08.2017 அன்று சனிக்கிழமை சர்வேதச இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்பிட்டி புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தரின் வீட்டில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதிபலனாக அப்பிரதேச இளைஞர் குழுக்கள் மூலம் பொது  இடங்களில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர் போன்றவை வழங்கப்பட்டன. 
மேலும் பொது மக்கள் நடமாடும் இடங்களான பஸ் மற்றும் முச்சக்கரவண்டி போன்ற இடங்களில் பார்வை  படும் வகையில் காட்சிப்படுத்தப் பட்டன.